கூட்டமைப்பினை மிரட்டும் பெரும்பான்மை?


நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டதோடு, புலிகளுக்கு சார்பான நிகழ்வுகளில் பங்கேற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூட்டு எதிரணி மிரட்டலொன்றை விடுத்துள்ளது. 

இந்த சம்பவங்கள் தொடர்பில் வெளியான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிப்பதோடு, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு கருத்துக்களை வெளியிடுவதோடு, பிரிவினவாதிகளை ஊக்குவிக்கும் விழாக்களில் பங்கேற்பது தீவிரவாத செயற்பாட்டுக்கு ஆதரவளிப்பதாகவே அமையுமென்பததோடு, அது அரசியல் யாப்பினை மீறும் செயலெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யாப்புக்கு எதிராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம்,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்றவற்றில் பங்கெடுக்கும் தரப்புக்களை அச்சுறுத்த அரசு முற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

No comments