விஜயகலா விவகாரம் நாடாளுமன்றில் அமளிதுமளி!! நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்கவேண்டுமென, யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை தொடர்பிலேயே நாடாளுமன்றில் இன்று (03) பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

சபையில் ஏற்பட்ட அமளிதுமளியை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால், நாடாமன்ற நடவடிக்கைகள் யாவும் நாளை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்கு நாடாளுமன்றத்தில் கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் வருகைதந்து, இதற்கு பதிலளிக்கவேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியினர் கோஷமெழுப்பியதால், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

No comments