இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு!



றெஜி­போ­மில் தயா­ரிக்­கப்­பட்ட சிறிய பட­கொன்­றில் மிதந்து தத்­த­ளித்த சிறு­வர்­கள் இரு­வர் காங்கே­சன் துறைக் கடற்­ப­டை­யால் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­ட­னர்.

 இந்­தி­யா­வில் தூண்­டி­லுக்­குச் சென்­ற­போது காற்­றின் வேகத்தை எதி்ர்க்க முடி­யாது கட­லில் தத்­த­ளித்­தோம் என்று கைதா­ன­வர்­கள் விசா­ர­ணை­க­ளில் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் காங்­கே­சன் துறைக் கடற்­ப­ரப்­பில் வைத்து நேற்று மாலை 6 மணி­ய­ள­வில் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் கட­லில் தத்­த­ளித்­தார்­கள், உண­வின்றி பசி­யில் இருந்­தார்­கள் என்று கடற்­ப­டை­யி­னர் தெரி­வி்த்­த­னர்.

 விசா­ர­ணை­க­ளின் பின்­னர் இரு­வ­ரும் காங்­கே­சன் துறைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.

No comments