குடாநாட்டை பதற்றத்தில் வைத்திருக்க மீண்டும் முயற்சி?

யாழ்.குடாநாட்டை மீண்டும் பதற்றமான சூழலில் வைத்திருக்க அரசு மீண்டும் முற்படுவதாக சந்தேகம்எழுப்பப்பட்டுள்ளது.
அவ்வகையில் வலிகாமத்தின் சண்டிலிப்பாயில் முகத்தை துணியினால் மூடிய வாள் வெட்டு கும்பலொன்றுமணித்தியாலக்கணக்கில் வீதியால் போவோர் வருவோரை சாகவாசமாக தரித்திருந்து அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வீதியால் சென்ற வாகனங்களையும் முகமூடி ரௌடிகள் அடித்து நொறுக்கியதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவனை மடக்கிப்பிடித்து “உயிர் வேண்டுமெனில் ஓடு எனக் கூறி, மோட்டார் சைக்கிளை பறித்து அவரை கால்நடையில் அனுப்பியதாகவும் தெரியவருகின்றது.

சண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்மித்த பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் நடந்தது. நேற்றிரவு 9 மணியளவில் முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி 8 மோட்டார்சைக்கிளில் வந்த பத்துக்கும் அதிகமான ரௌடிகளே இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

வாள்களுடனும் மது போதையிலும் நடமாடிய ரௌடிகளை கண்டு மக்கள் அச்சத்துடன் சிதறி ஓடினார்கள். வாகனங்களை கைவிட்டு ஓடியவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். நீண்டநேரமாக ரௌடிகள் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

ரௌடிகளின் அட்டகாசம் செய்துவிட்டு போன பின்னர் அங்கு வந்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சம்பவ இடத்தை பார்வையிட அவரது உதவியாளர்கள் அவரை பல கோணங்களிலும் புகைப்படம் எடுத்திருந்தனர். 

இதனிடையே குள்ள மனிதர்களென்ற போர்வையில் தாக்குதல்களில் குறித்த கும்பஐல ஈடுபடுவதாகவும் முன்னைய கிறீஸ் மனிதர்கள் போல மக்களை அச்சமூட்டி வீடுகளுள் முடங்க வைக்கும் நாடகமா இதுவென கேள்வி எழுந்துள்ளது.

No comments