சிறீதர் தியேட்டரை விட்டுவெளியே வர டக்களஸிற்கு சவால்!

முன்னாள் அமைச்சர்  விஜயகலாவின் மீது சேறுபூசும் வகையிலான சுவரொட்டிகளை டக்ளஸே ஒட்டியிருந்தார்.முடியுமானால் இது தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு சிறீதர் தியேட்டரை கைவிட்டு டக்ளஸ் வெளியே வரட்டுமென ஜக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான துவாரகேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் தெரிவிக்கையில் அரச அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க படங்களில் நடித்துக்கொண்டிருக்கலாம்.அதற்கு மட்டுமே அவர் பொருத்தமானவர்.தேவையில்லாமல் அவரை கட்சி அரசியலுக்கு கொண்டுவந்துள்ளது.

நம்பிக்கை அடிப்படையில் விஜயகலா  தெரிவித்த கருத்துக்களை ஊடகங்கள் முன்வெளிப்படுத்தி துரோகத்தினை அவர் இழைத்துவிட்டார்.
இந்நிலையில் 50 கோடி பெற்றுக்கொண்டு அமைச்சர் பதவியை இழந்துவிடடதாக ட்களஸ் துண்டுபிரசுரங்களை வெளியிட்டுவருகின்றார்.

முதலில் அவர் ஆக்கிரமித்திருக்கின்ற சிறீதர் திரையரங்கைவிட்டு வெளியே வரட்டும்.அதன் பின்னர் மற்றவர்களில் பிழை பிடிக்கட்டுமெனவும் துவாரகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.   

No comments