அஸ்மின் விவகாரம்:காவல்நிலையத்தில் அனந்தி!

வடமாகாணசபை அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி காவல்; நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
தன்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

குறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளதாகவும் அனந்தி கருத்து வெளியிட்டிருந்தார்.

போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வதந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார். 

என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்ய உள்ளேனென தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

No comments