500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

தமிழின அழிப்பு  போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு  ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நேற்றைய தினம்
Brandenburger Tor வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றது. இக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சில மக்களின் நிழற்படங்கள் உள்ளடக்கிய பாரிய பதாதையை மக்கள் தாங்கியவாறு நீதி கோரினர்.அத்தோடு இப் போராட்டத்தில் கலந்துகொண்ட உயர்கல்வி மாணவர்களால் ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரலெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.



No comments