35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83! பிரான்சு

மூன்று இரவுக்குள் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்
உயர் பாதுகாப்பு சிறைகளில் ஒன்றான வெலிக்கடைச்சிறையில் குட்டிமணி¸ தங்கத்துரை¸ஜெகன்உட்பட 52 தமிழ் அரசியல் கைதிகள் அடித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட நாள்.!

சிங்கள அரசின் அனுசரணையுடன் சிங்கள காடையர்களால் தமிழ்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும்¸ மானபங்கப்படுத்தப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நாள்.
தலைநகர் கொழும்பிலும்¸ சிங்கள தேசத்திலும் சகோதரத்துடன் வாழ்ந்த தமிழ்மக்களை அடித்து விரட்டி அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி வடக்கு¸ கிழக்குதான் உங்கள் தேசம் என்று அன்றே சிங்கள அரசு கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்த நாளை மறக்கமுடியுமா?

விடுதலையும்¸ தனித் தமிழீழமுமே தமிழர்களின் ஒரே தீர்வு என்று ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளை போராடவைத்த நாள்!

மனதில் நீங்காத நினைவுகளுடன் கறுப்புயூலை 23 நினைவேந்தல் நிகழ்வு.! பிரான்சில்

உயிர்வாழ விரும்பினால் - தமிழா
உனக்கென ஒரு தேசம்
சமைத்திடு என்று
உறைப்பாக உணர்த்தியது
எண்பத்து மூன்றில் .....!
உலகிற்க்கு உணர்த்த ஒன்று கூடுவோம்!
காலம்: 23-07-2018 - திங்கட்கிழமை
நேரம்: 15:00 மணி
இடம் : Place De Bastille
Métro Ling - 1, 8, 5
மேலதிக தொடர்புகளுக்கு:-
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு 06.52 72 58 67.
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு - பிரான்சு 06. 62 84 66 06.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 01 43 15 04 21.

No comments