பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவு விளையாட்டுப் போட்டி 2ஆம் நாள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (08) பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சார்சேலில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து 14 ஆம் நாள் தெரிவுப் போட்டிகளும் 15 ஆம் நாள் இறுதிப்போட்டியும் காலை 9.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளன.

இன்று காலை ஆரம்பநிகழ்வாக 24.09.2007 அன்று மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதியில் சிறீலங்கா படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை அருள்விழியின் சகோதரன் லெப்டினன் சங்கரின் நினைவுத் தூபியில் சுடர்வணக்கத்தையும், மலர்வணக்கத்தையும்  தொடர்ந்து பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டுத்துறை போட்டி முகாமையாளர் திரு இராஜலிங்கம் ஆசிரியரினால் கழக பொறுப்பாளர்களுக்கு போட்டிகளின் நடைமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.

இன்று தெரிவுப் போட்டிகளும் , சில இறுதிப் போட்டிகளும் இடம் பெற்ற சமவேளையில் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

No comments