வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் 3 இடங்களில் புத்தர் சிலைகள்!

வலி.வடக்­கில் இரா­ணு­வத்தினர் விடு­வித்த பகு­தி­க­ளில் பெரி­ய­ள­வி­லான விகாரை ஒன்­றும், வேறு இரு இடங்­க­ளில் புத்­தர் சிலை­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. வலி.வடக்­கில் விடு­விக்­கப்­ப­டாத பகு­தி­யில் விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று கடந்த காலங்­க­ளில் இணை­யத்­த­ளங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அந்­தப் விகாரை சட்­ட­வி­ரோ­த­மாக அமைக்­கப்­பட்­டது என்­றும் அந்­தச் செய்­தி­கள் தெரி­வித்­தி­ருந்­தன.

அந்த விகாரை இரா­ணு­வத்­தி­னர் வழி­ப­டவே அமைக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்­தி­னர் அந்த நிலத்தை விட்டு வெளி­யே­றும் போது விகாரை அங்கு இருக்­காது என்று அவர்­கள் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர். அந்­தப் பகு­தி­க­ளில் மக்­க­ளின் பாவ­னைக்­குத் தற்­போது விடு­விக்­கப்­பட்­ட­போ­தும், புத்­தர் சிலை­க­ளும், விகா­ரை­யும் அங்கு உள்­ளன என்று பொது­மக்­கள் தெரி­வித்­த­னர்.

விகா­ரையை விட­வும் இரு வேறு இடங்­க­ளில் புத்­தர் சிலை­கள் நிறு­வப்­பட்­டுள்­ளன என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர். இரா­ணு­வத்­தி­னர் தமது இருப்­பி­டங்­களை அகற்­றிச் சென்­றுள்­ள­போ­தும் விகாரை, புத்­தர் சிலை­களை அகற்­றப்­ப­ட­வில்லை என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

No comments