பாவப்பட்ட பணம் தவராசா வீட்டு வாசலில்!

பாவப்பட்ட பணம், வடக்கு மாகாண எதிர்க் கட்சி தலைவரின் வீட்டு வாசலில் மாணவர்களினால் வைக்கப்பட்டுள்ளது 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக் கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்தனர் 


குறித்த நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இன்று வடக்கு மாகாணசபைக்கு வருகைதந்து தவராசாவிடம் பணத்தினைக் கையளிக்கப்போவதாகக் கூறியிருந்தனர். அவ்வறோ பாவப்பட்ட பணம் என எழுதப்பட்ட பையினுள் சில்லறைக் காசுகளுன் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு மாகாணசபைக்கு வருகைதந்திருந்தனர்.

மாகாண முதல்வரினாலும் சிவஞானம் அவர்களினாலும் நிராகரிக்கப்பட்ட குறித்த பணத்தை இன்று  மாணவர்கள் எதிர்கட்சி தலைவர் தவராசா அவர்களின் வீட்டின் முன்பாக வைத்து விட்டு  சென்றனர் 

இதேவேளை தவராசாவின் வங்கிக் கணக்கிற்கும் பாவப்பட்ட பணம் எனக்கூறி இளைஞர்கள் சிலர் ஆகக் குறைந்த வைப்பிலிடும் தொகைகளை வைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments