யாழில் மீண்டும் கிட்டுப்பூங்கா! – யாழ் மாநகர சபையில் பிரேரணை

வட தமிழீழம், யாழில்  நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு பின்புறமாக காணப்படும் தீயாக தீபம் தீலபனின் சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட சங்கிலியன் பூங்காவாகவுள்ள கிட்டுப்; பூங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் மாற்றுவதற்கும் நாவாந்துறையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபியை நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சங்கிலியன் பூங்கா என அழைக்கப்படும் கிட்டுப் புங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் மாற்றப்பட்டு முன்னர் இருந்தமை போன்று மீண்டும் அதே இடத்தில் பூங்கா அமைக்கப்பட வேண்டுமென்றும் தியாக தீபம் திலிபனின் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவ வேண்டுமென்றும் நாவாந்துறையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபியை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் மணிவண்ணண் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார்.
இந்த பிரேரணை எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டு, உள்ளூராட்சி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments