இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை


இந்திய கடல் எல்லைக்குள் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் பிரவேசிப்பதில்லை என தமிழக கடற்படை பிராந்திய தலைமை அதிகாரி அலோக்பட்நாகர் தெரிவித்துள்ளார்.

எனினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்திய கடற்பரப்பில் இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் ஊடுருவதை கண்காணிக்க வசதிகள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இலங்கை இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதில்லை என்றும், இலங்கை தமது நட்பு நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பாதுகாப்பு குறித்து இரு நாடுகளும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்தி வருவதாகவும் தமிழக கடற்படை பிராந்திய தலைமை அதிகாரி அலோக்பட்நாகர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டாம் என தமிழக மீனவர்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments