சிறுத்தையைக் கொன்றதாக மேலும் நால்வர் கைது

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டிற்காக மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கடந்த 21 ஆம் திகதி அடித்து கொலை செய்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments