புலிக்கொடி மற்றும் கிளைமோர் கைப்பற்றிய சம்பவத்தில் மேலும் இருவர் கைது


முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய இருவரில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது தொடரும் வாய்ப்புக்கள் இருக்கிறது என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


No comments