தபால் ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தபால் சேவை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இன்று நள்ளிரவு முதல் கைவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமுடன் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து 16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு முதல் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments