இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியை மறுசீரமைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்கள் தொடர்பாகவும் இன்று சிறிலங்கா அதிபர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments