கொழும்பில் துப்பாக்கி சூடு! இராணுவ அதிகாரி படுகாயம்

கொழும்பில் இலங்கை இராணுவ கோப்ரல் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (25) காலை 7.20 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இரத்மலானை, சக்கிந்தாராம வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இராணுவ கோப்ரல் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற பகிரங்க துப்பாக்கி பிரயோகம் பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

No comments