யாழ்-கொழும்பு புகையிரதம் மீது கொடிகாமத்தில் கல்வீச்சு - கடற்படைச் சிப்பாய் காயம்


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது, கொடிகாமம் பகுதியில் வைத்து கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 7.30 மணியளவில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது இதில் பயணித்த கடற்ப்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments