சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை யாழ் மாநகரசபையில் நிறைவேற்றம்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி விசாரணை கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்ற வேண்டும் என கோரும் பிரேரணை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ் மாநகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வி.மணிவண்ணன் இன்று (25) சபையில் சமர்ப்பிது உரையாற்றினர். பின்னராக சபையின் ஏகமனதான தீர்மானத்துடன் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறித்த பிரேரணை வருமாறு,

இலங்கைத்தீவில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை
சட்டமீறல்கள் தொடர்பில் - ஐ.நா மனித  உரிமை பேரவை 2015ஆம் ஆண்டு நிறைவேற்றிய 30/01 தீர்மானத்தில் - தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகி
யுள்ளதாலும், இலங்கை அரசு அத்தீர்மானத்தை உதாசீனம் செய்துள்ளமையாலும்..
2017 மார்ச் இல் வழங்கப்பட்ட 2 வருடகால அவகாசத்தின் முதல் அரைப்பகுதியில் தீர்மானம் 30/01 ஐ நிறைவேற்ற சிறிலங்கா அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளமையாலும்
போருக்குப் பின்னராக -  தொடர்ச்சியாக பதவிக்குவந்த அரசாங்கங்கள் அனைத்தும் உள்ளக ரீதியாக விசாரணைகளைச் செய்வதற்கான அரசியல் விருப்பை குறைந்தபட்சமேனும் கொண்டிருக்காமை
நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டுள்ளமையாலும்
குறிப்பாக ஐ.நா மனித உரிமை பேரவை சர்வதேச குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளை
எடுப்பதற்கு அதிகாரமற்ற சபையாதலாலும்
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை
அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும்
தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்ற வேண்டும் என கோருகின்றோம்.

No comments