ஊடகங்களுக்கு அறிவில்லை:அறிவாளி சுமந்திரன் !



ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக வசைபாடி வரும் சிறிலங்காவின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் அறிவில்லாத ஊடகங்கள் என ஊடகவியலாளர்களை பார்த்து விமர்சித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று காலை யாழ்.கடற்றொழில் நீரியல் திணைக்களம் முற்றகையிடப்பட்டது.
இதன்போதே சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்றைய போராட்டத்தின் நிறைவில் நீரியியல் வளத்திணைக்கள பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் போராட்டக்காரர்களை வந்து சந்தித்துக்கலந்து ரையாடியிருந்தனர்.

இதன்போது போராட்டக்கார்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்; நீரியியல் வளத்திணைக்கள அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப் பேச்சுவார்த்தையின் போது அத்துமீறிய தொழிலாளர்களை தாம்  கடலில் வைத்து பிடிப்பதாக நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். இதன் போது குறிக்கிட்ட சுமந்திரன் பிடிப்பதாக அறிவித்துவிட்டு பிடித்தால் அவர்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது என்று கூறினார்.

மேலும் தற்போது தென்னிலங்கை மீனவர்கள் பிடிக்கப்பட இருக்கின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் இப்போதே வெளிப்படுத்தி விடுவார்கள். புத்தியில்லாத ஊடகங்கள் தான் இருக்கின்றது என்று மீண்டுமொருமுறை ஊடகங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments