யாழ். கொக்குவிலில் பொலிசார் மீது வாள்வெட்டு
கொக்குவில் பகுதியில் நேற்று மாலை பொலிசார் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொக்குவில் வராகி பகுதியில் நேற்று மாலையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிசார் ஒருவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வராகிப் பகுதியில் வசிக்கும் சந்தேக நபரை கைது செய்யச் சென்ற யாழ்ப்பாணம் பொலிசார் ஒருவரே வெட்டுக் காயத்திற்கு இலக்காகியுள்ளார்.
காயமடைந்த பொலிசார் சிறு காயங்களுடன் தப்பியதோடு சந்தேக நபரும் தப்பியோடியுள்ளார். இதனால் குறித்த சந்தேக நபரை பொலிசார் தேடிவருகின்றனர்.
Post a Comment