பணத்தால் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் விக்கிரகம்!!

யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரகம் ஒன்றுக்கு நாணயத்தாளினால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் பாவனையில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தமை சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவப்படுகின்றது.

எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை நாணயத்தாள்களைச் சேதமாக்குவது குற்றம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த அலங்கார படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments