மாணவர்களை விடுவிக்கக் கோரி கொக்குவில் மாணவர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்களால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை பாடசாலை முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், அதே பாடசாலையின் பழைய மாணவர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் இனம்தெரியாத சிலரால் தாக்கப்பட்டார்.
குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திருப்பிக் கொண்டிருந்த போது பாடசாலைக்கு அண்மையில் வைத்து இனம் தெரியாத சிலரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பழைய மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பழைய மாணவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“தவறு செய்யாதவனுக்கு சிறைவாசம், தவறு செய்தவர்களோ உல்லாசம், அகிம்சை வழிப் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள், சிறைக்குச் சென்ற மாணவனின் மனநிலை என்னாகும்“ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.
இன்று திங்கட்கிழமை காலை பாடசாலை முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், அதே பாடசாலையின் பழைய மாணவர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் இனம்தெரியாத சிலரால் தாக்கப்பட்டார்.
குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திருப்பிக் கொண்டிருந்த போது பாடசாலைக்கு அண்மையில் வைத்து இனம் தெரியாத சிலரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பழைய மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பழைய மாணவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“தவறு செய்யாதவனுக்கு சிறைவாசம், தவறு செய்தவர்களோ உல்லாசம், அகிம்சை வழிப் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள், சிறைக்குச் சென்ற மாணவனின் மனநிலை என்னாகும்“ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.
Post a Comment