சிங்கள ஊடகவியலாளர் சடலமாக மீட்பு

ஊடகவியலாளரும், பிரபல அறிவிப்பாளருமான ஹேமனலின் கருணாரத்ன, நேற்று (05) மில்கஹவத்தை - மாலபேயில் உள்ள அவரது  வீட்டிலிருந்து,  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (04) இரவு அவரது வீட்டின் கதவு மூடப்படாமல் இருந்துள்ளதாகவும், இதனால் சந்கேமடைந்து அவரது வீட்டைப் பரிசோதனையிட்ட போது, இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும், தெரிவித்த தலங்கம பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

No comments