கிழக்கு ஆளுநரின் மனைவிக்குப் பிணை

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில முன்னிலையான, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று (04) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் ஜூன் மாதம் முதலாம்  திகதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments