ஊதுபத்தி விளைவு! எரிந்து நாசமானது பி.எம்.டபிள்யூ கார்

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளார். புதிதாக கார் வாங்கியுள்ளதால் மத சம்பிரதாயப்படி காரின் முன்னால் ஊதுபத்தி கொளுத்தி வழிபட முடிவு செய்து காரின் முன் ஊதுபத்தியை வைத்துள்ளார்.

காரின் முன் ஊதுபத்தியை வைத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, அங்குள்ள நான்கு சிறுவர்கள் ஊதுபத்தியை கொளுத்தியுள்ளனர். திடீரென அணல் கங்குகள் காரின் மீது விழ, யாரும் எதிர்பாராத வகையில் கார் தீப்பிடிக்க தொடங்கியது.

என்ன நடக்கிறது என அனைவரும் உணர்வதற்கு உள்ளாகவே கார் நன்றாக எரிந்து நாசமாகக் காட்சியளிக்கின்றது.

No comments