சகலரும் நன்றிக்குரியவர்களே:வடக்கு முதலமைச்சர்!


கட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து மிகக் குறுகிய காலத்தினுள் இவ் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்கு செய்து நடத்தியமை எல்லோரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சில சில குறைபாடுகள் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டன. எனினும் நிகழ்வின் தாற்பர்யம் உணர்ந்தும் எமது மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றோரினதும் பொறுமை முதிர்ச்சி ஆகியன நிமித்தமும் அவற்றைப் பொருட்படுத்தாமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது.  

குறுகிய கால ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வைச் சிறப்புறச் செய்ய உதவிய சகலருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுகவென வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments