நினைவேந்தல் விவககாரம்:மாணவர்களிற்கு அனுமதியில்லை!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதற்கான அனுமதி பல்கலைக்கழகத்தால் மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருநெல்வேலியிலுள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இன்று (11) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப்பக்கல்லூரி மாணவ பிரதிநிதிகள், கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments