பகிடிவதையை நிறுத்தும் வரை கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடப்படும்!


கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் புதிய மருத்துவபீட மாணவர்கள் மீது மூத்த மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டுவரும்; பகிடிவதையை கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை குறித்த பீடம் தொடர்ந்து மூடப்படும் என மருத்தவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி அருள்பிரகாசம் அஞ்சலா தெரிவித்தார் மருத்தவபீட மாணவர் சங்கத்திற்கும் பீடாதிபதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (28) மட்டு போதனா வைத்தியசாலை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி அருள்பிரகாசம் அஞ்சலா கருத்த தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார் குறித்த மருத்துவ பீடத்திற்கு முதலாம் ஆண்டிற்கு புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளபோது அவர்கள் மீது சிரே~;ட மாணவர்கள் பகிடிவதை செய்துவந்தனர் இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் பலர் முறைப்பாடுகளை செய்தனர் இதனையடுத்து புதிய மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்ட 5 சிரே~;ட மாணவர்கள் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டனர் இந்த நிலையில் தொடர்ந்தும் புதிய மாணவர்கள் மீது பகிடிவதையை சிரே~;ட மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டுவந்த நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர் முறைப்பாடுகளை செய்துள்ளனர் இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் குறித்த பீடம் மூடப்பட்டுள்ளதையடுத்து மாணவர் சங்கத்தினருக்கும் மருத்துவ பீட பீடாதிபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது இதில் பகிடிவதையால் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத்தில் பகிடிவதையை எவ்வாறு நிறத்துவது போன்ற பல கருத்துக்களை பீடாதிபதிகள் மாணவர்களுக்கு முன்வைக்கப்பட்டது இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்றெ;ற போதும் தீர்வ எட்டப்படாத நிலையில் சிரே~;ட மாணவர்கள் பகிடிவதையை நிறுத்துவதற்கு ஒரு செயற்திட்டத்துடன் உத்தரவாதம் வழங்கப்படும் வரை தொடர்ந்து மருத்துவ பீடம் மூடப்பட்டும்; என மருத்தவ பீடாதிபதிகள் தீர்மானித்து தீர்மானத்தை வெளியிட்டதையடுத்து கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது.

No comments