காணி சுவீகரிப்பு தொடர்பாக கட்டுவனில் சுவரொட்டி!!


பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு தொடர்பான தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது.
பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு அமைவாக பலாலி வானூர்தி நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவிகரிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் காணிகளை உடைய உரிமையாளர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலக காணிக்கிளையுடன் தொடர்பு கொண்டு அவர்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments