நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்!


வடமராட்சி - நெல்லியடிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மற்றவரை கத்தியால் வெட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

No comments