ஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்!


எவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெற்ற பல சுற்று பேச்சுக்கள்; இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பினில் முடிவுக்கு வந்தது.
அனைவரும் சேர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தவும் பொதுச்சுடரை இனஅழிப்பில் தனது உறவுகளை இழந்த தாயொருவர் முதலடைச்சரிடமிருந்து பெற்று ஏற்றிவைக்கவும் இனஅழிப்பு நாள் பிரகடனத்தை முதலமைச்சர் ஆற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் நினைவேந்தல் தினத்தன்று முன்னெடுக்கப்படவேண்டிய ஏற்பாடுகள் தொடர்பில் முதலமைச்சர் தற்போது வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். 

No comments