காலைக்கதிர் செய்தியாளர் மீது வாள்வெட்டு!





யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) என்பர் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இன்று காலை 4 மணியளவில்  யாழ்.மாநகரின் புறநகர் பகுதியான கொழும்புத்துறை துண்டி பகுதியில் இடைமறித்த 10 பேர் கொண்ட குழு சரமாரியாக வாள்காளால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்கான செல்வராசா இராஜேந்திரன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலிற்கான காரணமெதுவும் தெரியவராத போதும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்தும் கடுமையாக விமர்சிப்பதாக காலைக்கதிர் பத்திரிகை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.


குறிப்பாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரனின் வலதுகரமாக செயற்பட்டுவரும் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தமிழரசுக்கட்சியை இரண்டாகப்பிளக்க சதி நடப்பதாக காலைக்கதிரை முன்னிறுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments