தப்பித்து ஓடிய சுவாமிநாதன்!

இலங்கை அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனை முற்றுகையிட்டு கேபபாபுலவு மக்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இன்றுடன் 452 ஆவது நாளாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவுகிராம மக்கள், அமைச்சரை நேரில் சந்தித்து, தமது காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடடுவதற்காக கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்திற்குமுன்னால் திரண்டிருந்தனர்.

கரைத்துரைப்பற்று பிரதேச செயலக கட்டடத்தின் வாசலிலேயே வழிமறித்து நின்ற நிலமீட்பு போராட்ட மக்கள், பல மணி நேரங்கள் அங்கேயே காத்திருந்ததுடன், நிகழ்வு முடிந்து வெளியே வந்த தமிழ்தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆ.புவனேஸ்வரன்மற்றும் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரை செயலகத்தை விட்டு வெளியேறவிடாது தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியேறிய அமைச்சர்டி..எம்.சுவாமிநாதனையும், கேப்பாபுலவு நில மீட்புபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தின் நுழைவாசலில்நின்று வழிமறித்து தமது காணிப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தினர்.

எனினும் மக்களுக்கு சரியான பதில்வழங்கமுடியாத நிலையில் பொலிசார் மற்றும் அமைச்சரின் மெய் பாதுகாலர்களையும்பயன்படுத்தி மக்களை தள்ளிவிட்டு அமைச்சர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 

No comments