இன்டர்பேர் பட்டியலில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்தப் பெயர்கள் பின்னர் நீக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய தேவைக்காக இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டது என குறித்த கேள்வி எழுப்பியுள்ளது அப்பத்திரிகை.

தற்பொழுது இன்டர்போல் பட்டியலில் எமில்காந்தன் மற்றும் இன்னுமொரு புலி உறுப்பினரின் பெயர் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

37 புலிகளின் தலைவர்கள் முன்னதாக இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த புலி உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எவரும் உயிரிழக்கவில்லை. இந்த நிலையில் யாரின் தேவைக்கு அமைய இந்தப் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்களை இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட முடியும் என இன்டர்போல் தமது ஊடகத்திற்கு அறிவித்துள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளன.

இன்டர்போல் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் காலத்திற்கு காலம் வெவ்வேறு விதத்தில் தெற்கின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments