யாழ்.மாநகரசபையில் ஆமிக்கு அனுமதியில்லை!

இலங்கை இராணுவத்தை சிவில் வேலைகளில் பயன்படுத்தக்கூடாதென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடும் எதிர்ப்பிற்கு முதல்வர் ஆனோல்ட் பணிந்துவந்துள்ளார்.

இன்றைய யாழ்.மாநகரசபை அமர்வின் போது முன்னணி உறுப்பினர் வி.மணிவண்ணன் நேற்று முதல் மரநடுகை திட்டத்தில் படையினரை களமிறக்க மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இலங்கை இராணுவ பிரசன்னத்தை பேணும் வகையிலாக சிவில் நடவடிக்கைகளில் அவர்களை பயன்படுத்த முயலும் முதல்வர் ஆனோல்டின் முயற்சிக்கு மாநகர சபை இன்றைய அமர்வின்போதே வி.மணிவண்ணன் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் பின்னர் படையினரை யாழ்.மாநகரசபைகளது வேலகளில் இணைத்துக்கொள்வதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments