வேட்டியை மடித்துக் கட்டி கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் செய்த செயல்!

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கஜேந்திரன் செய்த செயல்…வைரலாகும் புகைப்படம்

இரணைதீவில் கடற்படையின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிலமீட்பு போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திந்தார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்

இன்று புதன்கிழமை இரணைதீவுக்குச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனையவர்களும் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களைச் சந்தித்து உரையாடியதுடன் அவர்களுக்குத் தேவையான உலர் உணவுகளையும் வழங்கினார்கள்.

அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நிலங்களில் புல்லு வெட்டும் கருவி ஊடாக புல்லுகள் மற்றும் பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்து கொடுத்துள்ளார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் புல்லுவெட்டும் கருவியை பாவித்து புல்லுவெட்டும்  படங்கள் வெளியானதையடுத்து, அவை இணையத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

No comments