சாவகச்சோியில் விபத்து! இருவர் படுகாயம்!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உந்துருளியும் ஈறுருளியும் மகிழுந்தும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

No comments