முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இளவாலையில் தடையாம்!


யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் மே 18 ம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஞாபகார்த்த நிகழ்வுகளை இரத்து செய்யும்படி இலங்கை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் எந்தவொரு நினைவு நிகழ்வுகளையும் நடத்த அனுமதிக்க முடியாதென காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

சிவில் அமைப்புக்களும் உள்ளூர் பொது மக்களும் எதிர்வரும் மே மாதம் 18 ம் திகதி மாலை 5.30 மணியளவில் குறித்த ஞாபகார்த்த நிகழ்வை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நிகழ்வு இரத்துசெய்யப்பட வேண்டும் என இளவாலை காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார். மே 18 அன்று எவ்விதமான நிகழ்ச்சியையும் நடத்தினால் அது விடுதலைப்புலிகளை நினைவு கூர்வதாக கருதப்படும். எனவே இந்த நிகழ்வை நடத்த அனுமதிக்கமுடியாதென இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

No comments