தூத்துக்குடியில் படுகொலை! மட்டக்களப்பில் மக்களுக்கு அஞ்சலி! அரசுக்கு எதிர்ப்பு!

தமிழ்நாடு, தூத்துக்குடியில் தமிழகக் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 13 தமிழ்மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள் ''அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதே'' , ''இந்திய அரசே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்'' போன்ற பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன், படுகொலைக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

அதேநேரம் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.









No comments