தமிழகப்படுகொலைக்கு எதிராக ஈழத்தில் ஆர்ப்பாட்டம்!


தமிழகத்தின் தூத்துக்குடியினில் தமிழக உறவுகள் படுகொலை செய்யப்பட்டமையினை கண்டித்து யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகம் முற்றுகைக்குள்ளாகவுள்ளது.நாளை வெள்ளிக்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து  குறித்த கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.

முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் சுடரேற்றி கொல்லப்பட்ட தொப்புள் கொடி உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதுடன் அதன் தொடர்ச்சியாக நல்லூரிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை  முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவும் ஏற்பாடாகியிருப்பதாக தெரியவருகின்றது.

No comments