வவுனியா சிறை அநீதிகளுக்கு எதிராக போராட்­டம்!

வவு­னியா சிறைச்­சா­லைக்குள் நடக்­கும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­க­வும், அங்­குள்ள கைதி­க­ளின் உரி­மை­கள் மீறப்­ப­டு­வ­தைக் கண்­டித்­தும் வவுனியா மாவட்­டச் சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தி­னால் இன்று காலை 9 மணிக்கு, வவு­னியா நீதி­மன்ற வளா­கத்­துக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு போராட்­டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவு­னியா சிறைச்­சா­லைக் கைதி ஒரு­வர், வவு­னியா சிறைச்­சா­லை­யில் பணம் கொடுப்­ப­வர்­க­ளுக்கே வசதி­கள் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஏனை­யோ­ருக்கு உரிய வச­தி­கள் கிடைப்­ப­தில்லை என்­றும் கடந்த 4ஆம் திகதி நீதி­மன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார். இதன் அடிப்­ப­டை­யி­லேயே இன்­றைய கவ­ன­யீர்ப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

No comments