துப்பாக்கி வெடித்ததில் காவல்துறை உறுப்பினர் பலி!

தவறுதலாக வெடித்ததில், காவல்துறையினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் ஹொரவப்பொத்தனை, வாகொல்லாகட பிரதேசத்தில் இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் குறித்த காவல்துறை உறுப்பினர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த காவல்துறையினரை ஹொரவப்பொத்தானை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்ட்டு சிகிற்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிற்சை பலனின்றி குறித்த காவல்துறையினர் உயிரிழந்துள்ளார்.

No comments