மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண் உணர்த்துவது என்ன?


நான்­கா­வது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் உணர்வுபூர்­வ­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்­டி­க்­கப்­பட்­டது. தமி­ழின வர­லாற்றில் ஒரு சோக கலிங்­கப்போர் நிகழ்­வாக எழு­தப்­பட்­டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்­றைய தினம் வடகிழக்­கி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உற­வுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வில் இறு­தி­யுத்­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான இரத்த உற­வுகள், அயல் உற­வுகள், அர­சியல்வாதிகள், பொதுஅமைப்­புக்கள் ,மாண­வர்கள், மதத்­த­லை­வர்கள் என ஏகப்­பட்­ட­வர்கள் மதம், இனம், பிர­தேசம் பாராது கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான சுடர் ஒளியால் முள்­ளி­வாய்க்கால் சோக தேச­மாக காட்­சி­ய­ளித்­தது.
மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண்ணில் தமது உறவு ஆத்­மாக்­க­ளுக்கு அம்­மா­வென்றும் அப்­பா­வென்றும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மாமன், மாமி, பேரன், பேத்தி என ஆயி­ரக்­க­ணக்­கான உற­வுகள் உணர்­வு­டனும் உரு­கியும் மர­ணித்த மண்ணில் நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வு முள்ளிவாய்க்­காலில் மட்­டு­மன்றி வட­கி­ழக்கில் எங்­கெங்­கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்­கி­றார்­களோ அங்­கெல்லாம் அனுஷ்டிக்­கப்­பட்­டது. ஆரா­திக்­கப்­பட்­டது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நினைவு கூரும் அஞ்­சலி வாரம் ஆரம்­பிக்­கப்­பட்டு வட­கி­ழக்கில் 20க்கு மேற்­பட்ட இடங்­களில் அனுஷ்­டிக்­கப்­பட்டு வந்த நிலையில் யாழ். செம்­ம­ணிப்­ப­கு­தியில் பல தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்ட இடத்தில் அஞ்­சலி செலுத்தும் நிகழ்வு மே 12ஆம் திகதி நடை­பெற்­றது. கிரு­சாந்­தி­யென்னும் மாண­விக்கு நடந்த மாள­மு­டியா கொடூரம் நினைவு கொள்­ளப்­பட்­டது. அதேபோல் கடந்த மே 14ஆம் திகதி வட­ம­ராட்சி கிழக்கில் நாகர்கோவில் பாட­சாலை முன்­பாக 22 மாண­வர்கள் விமா­னக்­குண்டு வீச்­சுக்கு இலக்­காகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை நினைவு கூரும் வகையில் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பில் பன்­னங்­கு­டா­வெளியில் உணர்வுபூர்­வ­மாக நேற்­றைய தினம் நினை­வஞ்­சலி நடை­பெற்­ற­துடன் இரத்­த­தானம், அன்­ன­தானம் மற்றும் மாலை 6.30 மணி­ய­ளவில் பன்­னங்­கு­டா­வெளியில் ஆற்­றங்­கரை முற்­றத்தில் இறந்­த­வர்­களின் உற­வு­களால் 1000 சுடர்கள் ஏற்­றப்­பட்­டன. திரு­கோ­ண­ம­லையில் மே 16ஆம் திகதி மாலை கடற்­கரை தியா­கிகள் அரங்கின் முன்­பாக ஆத்­மாக்­களை நினைவு கூரும் வகையில் பொது­மக்­களால் சுடர் ஏற்றி அஞ்­சலி அனுஷ்­டிக்­கப்­பட்­ட­துடன் நேற்­றைய தினம் சிவன் ஆலயம் தந்தை செல்வா சிலைக்கு முன்­பாக சுடர் ஏற்றி அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மே 17ஆம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் (திருக்­கோ­விலில்) கொல்­லப்பட்ட சம்­ப­வத்தை நினைவுகூரும் வகையில் அஞ்­சலி செலுத்­தப்­பட்­ட­துடன் மாலை கல்­லடி கடற்­க­ரை­யிலும் இந்­நி­கழ்வு இடம்பெற்­றி­ருந்­தது. புலம்­பெயர் தேசமெல்லாம் தாய­க­மண்ணில் உயிர் நீத்த உற­வு­களை நினைந்­தேங்கி நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டுள்­ளது. 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் நிறு­வப்­பட்­ட­தற்­குப்­பின்னால் இந்த முள்ளி அழிப்பு நாள் அனுஷ்­டிக்க சுதந்­திர கதவு திறந்து விடப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும் பல்­வேறு தடைகள், சவால்கள், விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் இந்த நான்­கா­வது நினை­வேந்தல் நிகழ்வு நடாத்­தப்­பட்­டுள்­ளது. உலக வர­லாற்றில் மிகப்­பெ­ரிய தமி­ழி­னப்­ப­டு­கொலை நாள் மே 18 ஆகும். இந்த நினை­வு­ நாளை அனுஷ்­டிக்கும் முக­மாக வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் ஏற்­பாட்­டுக்­குழு அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. வரு­வோ­ருக்கு அனு­ச­ரணை வழங்கும் முக­மாக பொதுமக்­க­ளுக்­கான பந்­தல்கள், தண்ணீர் பந்­தல்கள் உட்பட ஏனைய வச­தி­களும் பொது அமைப்­புக்­களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் போரா­ளிகள் நிகழ்வை வடி­வ­மைக்கும் வகையில் மைதான ஒழுங்­கு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள். வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கிழக்­கி­லுள்ள 3 மாவட்­டங்­க­ளி­லு­மி­ருந்தும் ஏரா­ள­மான உற­வுகள் வருகை தந்­தி­ருந்­த­தோடு 8 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் தமது சொந்­தங்­களை களப்­பலி கொடுத்த உற­வுகள் என்ற வகையில் மாவட்­டத்­துக்கு ஒரு உற­வாக எண்­மரும் வட­கி­ழக்­குக்கு வெளியேயுள்ள உற­வு­களில் ஒரு­வ­ரு­மாக ஒன்­பது உற­வுகள் சுட­ரேற்றி தங்கள் உற­வு­க­ளுக்கு ஆகுதி செய்து வைக்க ஏனைய உற­வுகள் ஏற்­று­வ­தற்­கென ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த 1500 சுடர்கள் அந்த விதைப்பு மண்ணில் ஏற்­றப்­பட்­டன. எங்கும் சுடராய் ஒளிவேள்­வியாய் சுடர் கள் வானத்தை நோக்கி வளர்ந்து ஆத்­மாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­துபோல் இருந்­தது. கண்­ணீரும் கம்­ப­லையும் நிறைந்த மண்­ணாக முள்ளி மண்­கா­ணப்­பட்­ட­தாக உண­ரப்­பட்­டது. சுதந்­திர இலங்­கையில் தமிழ் இனத்­தின்­ மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட பல­கோர கொடிய சம்­ப­வங்­களில் முள்­ளி­வாய்க்கால் யுத்த வடுக்­களை தமிழ் மக்கள் கோடி வரு­டங்கள் கழிந்­தாலும் மறக்­க­ மு­டி­யாத அள­வுக்கு வர­லாற்றை நினைவு கொள்ளும் மே 18. இலங்கை தமிழ் மக்­களின் துக்­கிப்பு நாளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­து போல் முள்ளி நினை­வேந்தல் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மாவீரர் தினத்­துக்கும் முள்ளி வாய்க்கால் நினை­வேந்தல் தினத்­துக்கும் வித்­தி­யா­ச­முண்டு. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தனித்­தமிழ் ஈழம் என்ற கன­வோடு களப்போர் புரிந்து வீரச்­சா­வ­டைந்த மாவீ­ரர்­களை நினைவு கொள்ளும் நாள் மாவீ­ரர் தின­மாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இறு­தி­ யுத்­தத்தில் ஏது­ம­றி­யாமல் இறந்துபோன அப்­பாவி மக்­களை அவர்­களின் உற­வுகள் நினைவு கொள்ளும் நாள் பிதி­ராகிப்போய் பிறப்­புக்கும் இறப்­புக்கும் எல்லை தெரி­யாத அந்த அப்­பாவி பொது­மக்­களை கொன்று குவித்த தின­மாக அது ஆரா­திக்­கப்­ப­டு­கி­றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் தமி­ழர்­களின் உரி­மைப்­போ­ருக்கு உலக வல்­ல­ர­சு­க­ளோடு சேர்ந்து உலை­வைக்­கப்­பட்­ட­ மாதம். மே 18ஆம் திகதி உல­க­ வ­ர­லாற்றை உலுக்­கிய நாள் என்­பதை உல­கமே கண்­ணீர் ­மல்க ஏற்­றி­ருந்­தது. வன்­னிப்­போரை நய­வஞ்­ச­கத்­துடன் மூட்­டி­யது கண்டு உல­கமே அழுது கண்­ணீர் ­வ­டித்­தது. 2009ஆம் ஆண்டு வன்­னிப்போர் மூண்­ட­வே­ளையில் பாரா­ளு­ம­ன்றில் வன்னி நிலை­மையை எடுத்­துக்­கூ­றிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அவர்கள் பின்­வ­ரு­மாறு உல­கத்­துக்கு அறி­வித்தார்.
வன்­னியில் சாட்­சி­ய­மில்லா படு­கொ­லைகள் நடந்து கொண்­டி­ருக்­கி­ன்றன. மிகப்­பா­ர­தூ­ர­மான மனி­தப்­பே­ர­வலம் ஏற்­பட்­டுள்­ள­துடன் மரணம், அழிவு பெருந்­தொ­கையில் இடம்பெற்­றுள்­ள­தாக நான் அறி­கிறேன். இங்கு இடம்பெறும் அழி­வைப்­போன்று உலகில் வேறு எந்த நாடு­க­ளிலும் இடம்­பெ­ற­வில்லை (இரா. சம்­பந்தன் 5.5.2009 பாராளுமன்றில்) இச்­செய்­தியை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஐ.நா. செய்­ம­திப்­ப­டங்கள் ஊர்­ஜிதம் செய்­துள்­ள­தாக செய்­திகள் கசிந்­தி­ருந்­தன. அதன்­ பி­ர­காரம் மோதல் நடை­பெறும் சூன்ய பிர­தே­சத்­துக்குள் அடை­பட்­டி­ருக்கும் பெண்கள், சிறுவர், முதியோர் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் மர­ணத்­துடன் போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­க­ளென சர்வ­தேச செஞ்­சி­லு­வைச்­சங்கம் அச்சம் தெரி­வித்­தி­ருந்­தது. பொது­மக்கள் தங்­கி­யி­ருக்கும் பாது­காப்பு வல­யத்தின் மீது விமா­னப்­படை குண்டு வீச்சு நடத்­தி­ய­தாக செஞ்­சி­லுவைச் சங்கம் கவலை தெரி­வித்­தி­ருந்­தது. வன்­னிப்­போரும் அதன் இழப்­புக்கள் பொது­மக்கள் தொடர்பில் அப்­போது கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ. நா. சபையின் கொழும்­புக்­கான பேச்­சாளர் கோர்டன் வைஸ் வன்­னிப்­ப­கு­தியில் இரத்தக்களரி ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தனக்கு கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.வன்னி பாதுகாப்பு வல­யத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­கி­றார்கள் என வைஸ் கவலை தெரி­வித்­தி­ருந்தார். வன்னி இறு­தி­ யுத்தம் குறித்து இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பிரான்ஸ் நாட்டின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரான பெர்னாட் குச்­னரும் இங்­கி­லாந்து அமைச்­ச­ரு­மான டேவிட் மில்­லி­பாண்டும் வன்னி நிலை குறித்து ஆராய உட­ன­டி­யாக ஐ.நா. சபை கூட்­ட­ வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்­த­மையை கவ­ன­மாக எடுத்­துப்­பார்ப்பின் முள்ளி வாய்க்­காலில் எத்­த­னை­யா­யிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­க­லா­மென ஊகிக்க முடியும். கொல்­லப்­பட்ட பொது­மக்கள் தொடர்பில் கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ.நா. சபைக்­கான மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான உதவி செய­லாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வன்னி யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை ஒரு­போதும் தெரி­யா­மலே போகலாம். இடம்பெற்ற யுத்­தத்தில் கடை­சிக்­கட்­டத்தில் இறந்த அப்­பாவி பொது­மக்­களின் சரி­யான எண்­ணிக்கை தெரி­யா­மலே இருக்­கி­றது. இந்த யுத்­தத்தில் 80 ஆயிரம் தொடக்கம் 1 லட்­சம்­வரை கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என கருத்து தெரி­வித்­தி­ருந்தார். யுத்­தம்­ மு­டி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தாக கூறப்­படும் மே 18ஆம் திகதி ஜோர்­தா­னி­லி­ருந்து திரும்­பிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விமா­னத்தை விட்டு இறங்­கி­ய­வுடன் தரையில் விழுந்து முத்­த­மிட்டு போர் முடிந்­து­விட்­டது. புலிகள் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு விட்­டார்கள் என்­ப­தற்­காக பெரு­மைப்­பட்­டாரே தவிர கொல்­லப்­பட்ட பொதுமக்­க­ளுக்­காக அவர் ஒரு சொல்லும் உச்­ச­ரிக்­கா­மலே சென்­றதை உலகம் தொலைக்­காட்­சி­களில் கண்­டு­கொண்­டது. இறுதி யுத்­தத்தில் நடந்­தே­றிய சம்­ப­வங்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் விடுத்த உத்­தி­யோகபூர்வ­மான அறி­வித்­தல்கள் யாதெ­னப்­பார்ப்பின் 2 லட்­சத்து 80 ஆயிரம் பேர் அகதி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் (லண்டன் டெலி­கிராப்) 9100 விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டைந்­துள்­ளனர். இதில் 7500 பேர் புனர்வாழ்வு நிலை­யங்­க­ளிலும் 1600 பேர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை தொடர்பில் விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் ஊட­கத்­துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்­தன தெரி­வித்­தி­ருந்தார். பிர­பா­கரன் உட்­பட 300 புலி உறுப்­பி­னர்­களின் சட­லங்கள் முள்ளிவாய்க்­காலில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­த­க­வலை இரா­ணு­வப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் உதய நாண­யக்­கார தெரி­வித்­தி­ருந்தார். பொது­மக்­களின் இறப்­புக்­கு­றித்து அரச தரப்­பினர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சரி­யான தக­வல்­களை தெரி­விக்­க­வில்லை. 2012ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­ இ­லங்­கைக்­கெ­தி­ரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்றம் தொடர்பில் அமெ­ரிக்­காவால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்கள் இலங்­கைக்கு பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­ய­போதும் அடுத்­த­டுத்த ஆண்­டு­களில் இலங்­கைக்கு கொடுக்­கப்பட்ட அவ­கா­சங்கள், மனித உரிமை ஆணை­ய­கத்தின் நெகிழ்­வுத்­தன்­மைகள், சர்­வ­தேச போக்­கையும் அபிப்­பி­ரா­யத்­தையும் எவ்­வாறு மாற்­றி­ய­மைத்­தது என்­பது உலகம் அறி­யா­த­வொ­ரு­வி­ட­ய­மல்ல. 2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட நல்­லா­ட்சி அரசாங்கம் கார­ண­மாக சர்வ தேசத்தின் அபிப்­பி­ரா­யமும் போக்கும் எவ்­வாறு தலை­கீ­ழாக மாறி­யுள்­ள­தென்­பதை அண்­மையில் பாரா­ளு­மன்றில் ஜனா­தி­பதி நிகழ்த்­திய அரச கொள்கை விளக்­க­வு­ரை­யி­லி­ருந்தும் பிர­த­மரின் மேதின உரை­யி­லி­ருந்தும் தெரிந்­து­கொள்­ளலாம். முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் என்­பது வரு­டா­ வ­ருடம் கொண்­டா­டப்­படும் ஒரு சடங்­காக அமை­யாது உற­வு­களை இழந்­த ­மக்­களின் உள்­ளத்தை ஆற்­றுப்­ப­டுத்தும் நிகழ்­வா­கவும் அவர்­களின் அர­சியல் மற்றும் வாழ்க்­கையை ஈடேற்­றவும் வழி­காட்­டவும் அமைய வேண்டும் என சமத்­துவ சமநீதிக்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இந்த கருத்து இன்­றைய யதார்த்­தத்தை தெளிவா­கவே விளக்­கு­வ­தாக அமை­கி­றது. தமிழ் மக்­களின் 30 வருட அகிம்சை போராட்டம் அதனைத் தொடர்ந்து 30 வரு­ட­கால ஆயு­தப்­போ­ராட்டம் என்­ப­னவற்றின் அடுத்த பரி­ணா­மமே இன்­றைய உடன் போக்கு போராட்­ட­மாக மாறி­யுள்­ளது. எனவேதான் 60 வருட கால போராட்­டத்தை அடுத்த கட்­டத்­துக்கு எடுத்தும்செல்லும் வழியை முள்­ளி­வாய்க்­காலில் ஏற்­றப்­பட்ட சுடர்கள் மூலம் அவர்கள் தேடு­கி­றார்கள் என்­பதை அர­சியல் தலை­மைகள் உண­ர­ வேண்டும்.
விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் கடந்த கால, நிகழ்கால, எதிர்­கால அர­சி­யலை அனு­மா­னித்து உணர்­வ­தற்­கான ஒரு மைய­மாகும் என்று கூறப்­ப­டு­கி­றது. இந்த மையத்­தி­லி­ருந்து புதிய அர­சியல் தத்­து­வத்­தையும் முன்­னெ­டுப்­புக்­க­ளையும் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­த­ வேண்டும். வலி­யு­றுத்தி நிற்­க ­வேண்­டு­மென்­ப­துதான் இன்­றைய தமிழ் மக்­களின் தேவை­யாக இருக்­கி­றது. கோரிக்­கை­யாகவும் மாறு­கி­றது. தமிழ் மக்­களின் வர­லாற்று அனு­ப­வங்­க­ளைப் பார்ப்போமாயின் எதி­லுமே ஒன்றுபட்ட முடி­வுக்கு வரு­வ­தென்­பது முடி­யாத காரி­ய­மா­கவே இருந்­துள்­ளது. இரண்டு பஞ்­சாங்கம் ஏட்­டிக்குப் போட்­டி­யான தலை­மைகள், பல கட்­சிகள், பல இயக்­கங்கள், மாறு­பட்ட சடங்­குகள், முறைகள் வேறு­பட்ட போக்­குகள் என எல்­லாமே ஏட்­டிக்குப் போட்­டி­யா­கவே இருந்து வந்­துள்­ளன. அனு­ப­வங்­களை பாடங்­க­ளா­கவோ வர­லாற்றை முன்­னு­தா­ர­ணங்­க­ளா­கவோ கொண்டு நடக்­கா­ததன் கார­ண­மா­கவே இன்னும் திக்கு தெரி­யாத காட்டில் நடந்து போய்க்­கொண்­டி­ருக்­கி­றது தமிழர் வர­லாறும் வாழ்­வி­யலும். முள்ளிவாய்கால் நினை­வேந்தல் என்­பது தமிழ் மக்கள் வாழ்­வியல் மற்றும் அர­சியல் போராட்­டத்தில் கறை­ப­டிந்த அத்­தி­யாயம் என்­ப­தை­விட புதிய பாதையை வகுக்­க­வேண்­டிய அர­சியல் தத்­து­வத்தை வகுக்­க ­வேண்­டிய ஒரு சந்­தியில் நின்றுகொண்­டி­ருக்­கிறோம் என்­பதை அனைத்து தரப்­பி­னரும் உண­ர­வேண்டும். அதை­வி­டுத்து முள்ளி நினை­வு­களை அஞ்­ச­லிக்­கக்­கூட மாகா­ண­ சபை, பல்­க­லை­க்­க­ழகம், அந்த கட்சி, இந்த கட்­சி­யென தனிவழி­ தே­டிக்­கொண்­டி­ருப்­பது எமக்கு இன்னும் இழுக்­கா­கவே இருக்­கி­றது. எதிர்காலத்தில் இத்­த­கைய அட்­டூ­ழியம் நடை­பெ­றா­ம­லி­ருக்க அடுத்த தலை­மு­றையை நாம் தயார்ப்­ப­டுத்­த­ வேண்டும். இதை செய்­ய­ வேண்­டி­ய­வர்கள், செய்யக்கூடி­ய­வர்கள் அர­சியல் தலைமை­களே. ஜப்­பா­னி­யர்கள் இரண்டாம் உல­கப்­போரின் வடுக்­களை தாங்­கிக்­கொண்டு எப்­படி எழுந்து நின்­றார்­களோ, அதே போல் பலஸ்தீனி­யர்கள், தென்­னா­பி­ரிக்­கர்கள் ஆகி­யோரை நாம் முன்­னு­தா­ர­ணங்­க­ளாக பார்க்­க­ வேண்டும். இன்­றைய இலங்கை அர­சி­யலின் தேக்க நிலை தமி­ழர்­க­ளைப்­பொ­றுத்­த­வரை ஆரோக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­ட­வில்லை. தமிழ் ­மக்­க­ளுக்­கான தீர்வுக்­காக எடுக்­கப்­பட்டு வரும் எல்­லா­ வகை முயற்­சி­களும் குறித்த ­புள்­ளியைவிட்டு நக­ரா­மலே நின்று கொண்­டி­ருக்­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் காலங்கள் கடத்­தப்­ப­டு­கி­றதே தவிர அடைவு மட்­டங்­களை நோக்கி நகர்த்­தப்­ப­டுதல் என­்பது வெறும் பூஜ்­ஜி­யமா­கவே காணப்­ப­டு­கி­றது. இதற்கு நாம் யாரையும் குறை­கூறி அழுது கொட்­டு­வதில் அர்த்தம் இல்­லை­யென்ற முடி­வுக்கே வர­ வேண்­டி­யுள்­ளது. கடந்த காலத்தில் முன்­னைய பேரி­ன­வாத தலை­வர்­க­ளாலும் அர­சாங்­கங்­க­ளி­னாலும் எவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டோமோ அதே­போன்­ற­தொரு அர­சியல் காலநிலை தான் இப்­பொ­ழுதும் காணப்­ப­டு­கி­றது. தலை­வர்­களும் ஆட்­சி­யா­ளர்­களும் புதிது புதி­தாக வந்­தாலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­யா­னது இன்னும் ஊறுகாய் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க வியாக்­கி­யானம் சான்­றா­க­வுள்­ளது. வட­கி­ழக்கில் மீண்­டு­மொரு யுத்தம் நிக­ழாமல் இருக்­க­வேண்­டு­மாயின் மக்­களின் பொறு­மை­யி­ழப்­பினை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டுத்­த­ வேண்­டு­மாயின் மக்­களின் விருப்­பத்­தையும் இணக்­கப்­பாட்­டையும் பெற்ற அரசியல் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென பழைய புள்ளிக்கு தீர்வை கொண்டு வந்துள்ளார். அரசாங்கத்தின் கவனம் முழுவதும் இன்னும் பயங்கர வாதத்தை தோற்கடிப்பதிலேயே செலுத்தப்படுகிறது என்பதை ஜனாதிபதி தனது உரையில் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாதுள்ளது. கடந்த 3 வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப்பெற்று அந்த கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே தான் முயற்சித்து வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவருடைய கரிசனை தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லையென்பதாகும். போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடும் தீர்மானமும் தெளிவாகவே பல தடவைகள் அவரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நீதி முறையையோ கலப்பு நீதி விசாரணையையோ யான் அனுமதிக்கப் போவதில்லை. இராணுவ வீரர்களை நான் காட்டிக்கொடுக்கப்போவதுமில்லை.தண்டிக்கவும் விடமாட்டேன் என தீவிரமாக கூறிவருவதை கேட்டிருக்கிறோம். ஐ.நா. சபைக்கு கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கனதியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாருமில்லை என நல்லாட்சி தலைவர் கூறிவருவது தொடர்பில் நாம் இன்னும் வாழாது இருக்கிறோம். இத்தகைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றலானது தமிழ் மக்களுக்கான புதிய விதியை வகுக்க வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றதென்பதை நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்த்தியிருக்கிறது. எதிர்காலத்தின் விதியை நோக்கி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டுமாயின் ஒன்றுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

No comments