பிணை அனுமதி மறுப்பு!

யாழ் சுன்­னா­கம் பொலிஸ் நிலை­யத்­தில் தடுப்­புக் காவ­லிலி­ருந்த சந்­தே­க­நபரை சித்­தி­ர­வ­தை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகள் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றைய தினமும் தள்ளுபடி செய்தது.
மேற்படி கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலி­ஸார் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பமே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபரான சுமணனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனைக் கைதிகளான மனுதாரர்கள் ஐந்து பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளநிலையில் பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட முக்கிய காரணிகளை முன்வைத்து அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.
2011ஆம் ஆண்டு நவம்­பர் 25ஆம் திகதி சுன்­னா­கம் பொலி­ஸா­ரால் 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் புன்னாலைக்கட்டுவானைச் சேர்ந்த சிறிஸ்­கந்­த­ராஜா சும­ணன் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ரா­கக் கைது செய்­யப்­பட்­டார். அவர் விசா­ர­ணைக்­காக கிளி­நொச்சி, வட்­டக்­கச்­சிக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.
அங்கு சும­ணன் பொலிஸ் காவ­லி­லி­ருந்து தப்­பித்து இர­ணை­ம­டுக் குளத்­தில் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார் என்று பொலி­ஸா­ரால் கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் அறி­யி­டப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் 2011ஆம் ஆண்டு நவம்­பர் 26ஆம் திகதி மாலை இடம்­பெற்­றது என்­றும் பொலி­ஸா­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.
ஏனைய 4 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ரா­க­ பெரும் குற்­றம் வழக்கு மல்­லாகம் நீதி­வான் மன்­றில் பதிவு செய்­யப்­பட்டு விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்­கின் விசா­ர­ணையின் போது சந்­தே­க­ந­பர்­களில் இரு­வர், சுன்­னா­கம் பொலிஸ் நிலைய முன்­னாள் பொறுப்­ப­தி­காரி சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 8 பொலி­ஸார் மீது சும­ணனை சித்­தி­ர­வதை செய்து கொலை செய்­த­னர் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­னர்.
மல்­லா­கம் நீதி­வான் அந்­தோ­னிப்­பிள்ளை ஜூட்­சன், "சந்­தே­க­ந­பர்­களின் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் பொலி­ஸா­ரி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சித்­தி­ர­வதை மற்­றும் கொலை ஆகிய இரு பிரி­வு­க­ளில் வழக்­கு­களை முன்­னெ­டுக்­கு­மாறு குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டார். அத்­து­டன், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்­கும் நீதிவான் அறி­வித்­தல் வழங்­கி­னார்.
சம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­னர் சந்­தே­க­ந­பரை கிளி­நொச்­சிக்கு அழைத்­துச் சென்­றனர் என்று தெரி­விக்­கப்­பட்ட சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 5 பொலி­ஸா­ருக்கு எதி­ராக கொலை குற்­றச்­சாட்­டு வழக்கை கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் முன்­வைத்­த­னர்.
அத்­து­டன், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் பொலிஸ் அதி­காரி சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 8 பொலி­ஸா­ருக்கு எதி­ராக 1994ஆம் ஆண்டு சித்­தி­ரை­வ­தை­கள் சட்­டத்­துக்கு அமை­வாக யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது.
இதில் சித்­தி­ர­வதை வழக்­கில் சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 6 பொலி­ஸா­ருக்கு 10 ஆண்­டு­கள் கடூழி­யச் சிறைத் தண்­டனை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றால் கடந்த ஆண்டு வழங்­கப்­பட்­டது. அவர்களில் ஒருவர் வெளிநாடொன்றில் வாழ்வதால் 5 பொலிஸாரே சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 தண்டனைக் கைதிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து தமது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
தமது மேன்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளதால் அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும்வரை தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி அவர்கள் 5 பேரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டின் போதான பிணை விண்ணப்பத்தை சீராய்வு மனு ஊடாக முன்வைத்தனர்.
இந்தச் சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு வந்தது. அதன்போதே சீராய்வு மனுவை நிராகரித்து நீதிபதி கட்டளை வழங்கினார்.
இதேவேளை, தடுப்­புக் காவ­லிலிருந்த சந்­தே­க­ந­ப­ரைக் கொலை செய்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கிளி­நொச்சி நீதி­வான் நீதிமன்­றால் விளக்­க­ம­றி­ய­லில் உத்தரவை எதிர்த்து சிந்­திக்க பண்­டார உள்­ளிட்ட 5 பொலி­ஸார் சார்­பி­லும் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் கடந்த ஆண்டு பிணை விண்­ணப்­பம் செய்­யப்­பட்­டது. அந்த விண்­ணப்­பம் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments