கொடி அரைக்கம்பத்தில்:சீற்றத்தில் தெற்கு!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார என்பவர் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் அரசு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பில் தென்னிலங்கை இனவாத அமைப்பொன்று வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனிற்கு எதிராக கொழும்பு காவல்துறையினில் புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அமைச்சரொருவர் கொடி இறக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

No comments