தீ விபத்துக்குள்ளாகியது தனியார் வங்கி

களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (27) அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கொஹுவெல காவல்துறையினர் மற்றும் தீ அணைப்பு பிரிவினரின் உதவியுடன் இந்த தீ கட்டுப்பாட்டற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் வங்கியின் முன்னாள் உள்ள பகுதியுத் ஏ.டி.எம் இயந்திரமும் பாதிப்படைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்திற்கான காரணமே விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களே இதுவரையில் இனங்காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கொஹுவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments