கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

கட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்ளார். இந்­தச் சம்­ப­வம் வவு­னியா, தம்­ப­னை­யில் நேற்று (22.05.2018) நட­ந்­துள்­ளது. தம்­ப­னை­யைச் சேர்ந்த ரவிச்­சந்­தி­ரன் (வயது-–38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரவிச்­சந்­தி­ர­னும், அவ­ரது நண்­ப­ரும் நேற்­றுக்­காலை வேட்­டைக்­குச் சென்­றுள்­ள­னர். அப்­போது பொருத்தப்பட்ட கட்­டுத்­துப்­பாக்கி திடீ­ரென வெடித் துள்­ளது. இந்­தத் தக­வல் ரவிச்­சந்­தி­ர­னின் நண்­ப­ரால் ஊர் மக்ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. ஊர் மக்­கள் உடலை மீட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்­ள­னர்.

No comments