ட்விட்டரில் எதிர்க் கருத்துக் கூறுபவர்களை டிரம்ப் தடை செய்யக்கூடாது! நீதிமன்றம் உத்தரவு

எதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக் செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், டிரம்ப் அப்படி யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் முக்கிய இடம் வகிக்கிறார். 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிரம்பை பின்தொடர்ந்து வருகின்றனர்.

காரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து டிரம்ப் ஆக்டிவாக இருப்பவர். தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இதில், டிரம்பால் தடை செய்யப்பட்ட 7 பேர் நீதிமன்றை நாடினர்.

டிரம்ப் தங்களை தடை செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில், பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments